search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நிதி நிறுவனம்"

    • சென்னை மயிலாப்பூர் தெற்கு மாட வீதியில் கடந்த 1872ம் ஆண்டு ‘தி மயிலாப்பூர் இந்து சாசுவத நிதி லிட்’ என்ற பெயரில் நிதி நிறுவனம் தொடங்கப்பட்டது
    • இந்த நிதி நிறுவனத்தில் முதலீடு செய்தவர்களின் ரூ.525 கோடியை திரும்ப கொடுக்க மறுப்பதாக பாதிக்கப்பட்ட முதலீட்டாளர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்

    சென்னை மயிலாப்பூர் தெற்கு மாட வீதியில் கடந்த 1872ம் ஆண்டு 'தி மயிலாப்பூர் இந்து சாசுவத நிதி லிட்' என்ற பெயரில் நிதி நிறுவனம் தொடங்கப்பட்டது. இந்த நிதி நிறுவனத்தில் தற்போது 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் நிரந்தர வைப்பு தொகை உறுப்பினர்களாக உள்ளனர். இதில் பெரும்பாலும் மத்திய மற்றும் மாநில அரசு ஊழியர்கள் மற்றும் முதியவர்கள் தங்களது ஓய்வூதிய பணத்தை அதிகளவில் முதலீடு செய்துள்ளனர். இந்த நிதி நிறுவனம் முதலீடு செய்யும் பணத்திற்கு 10 முதல் 11 சதவீதம் வரை வட்டி அளிப்பதாக அறிவிக்கப்பட்டது.

    இதனிடையே இந்த நிதி நிறுவனத்தில் முதலீடு செய்தவர்களின் ரூ.525 கோடியை திரும்ப கொடுக்க மறுப்பதாக பாதிக்கப்பட்ட முதலீட்டாளர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். மேலும் 150க்கும் மேற்பட்டோருக்கு வழங்கிய காசோலை பணம் இல்லாமல் திரும்பியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் தினமும் பாதிக்கப்பட்டவர்கள் குவிந்த வண்ணம் உள்ளனர்.

    இந்நிலையில், முதலீட்டாளர்களின் ₹525 கோடி மோசடி செய்துள்ளதாக எழுந்துள்ள புகாரால், அந்த நிதி நிறுவனத்தின் தலைவராக உள்ள சிவகங்கை பாஜக கூட்டணி வேட்பாளர் தேவநாதன் யாதவ் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என தேர்தல் ஆணையத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி புகார் அளித்துள்ளது.

    அந்த புகாரில், "சென்னை, மயிலாப்பூர் இந்து சாசுவத நிதி லிமிடெட் நிதி நிறுவனத்தின் வைப்புத்தொகையின் மீது திரட்டப்பட்ட வட்டியை முதலீட்டாளர்களுக்கு செலுத்த மறுப்பதாக கூறப்படுகிறது. அந்த நிறுவனத்தின் வங்கிக் கணக்கில் பணம் இல்லாததால் நிறுவனம் வழங்கிய கிட்டத்தட்ட 150 காசோலைகள் திரும்ப வந்துள்ளது.

    அந்த நிதி நிறுவனத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர், டி.தேவநாதன் சிவகங்கை தொகுதியின் பாஜக வேட்பாளர் ஆவார். பிரதமர் அவருக்காக பிரச்சாரம் செய்கிறார்.

    ஆகவே அவர் தனது அரசியல் செல்வாக்கைப் பயன்படுத்தி குற்றச் சாட்டுக்களில் இருந்து தப்பித்து விடுவாரோ என்ற அச்சம் முதலீட்டர்களுக்கு எழுந்துள்ளது.

    இத்தகைய சூழ்நிலையில் பாஜக வேட்பாளர் தேவநாதன் மீது தேர்தல் ஆணையம் தகுந்த விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும்" என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தமிழ்நாடு மாநில கவுன்சில் வலியுறுத்தியுள்ளது.

    • நிதி நிறுவனத்தில் பணியாற்றி வந்த கண்ணன் என்பவர் மீது சந்தேகம் ஏற்படவே அவரிடம் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தப்பட்டது.
    • வசூலித்த பணத்துடன் மேலாளர் எந்த வழியில் வருவார்? என்று ஸ்கெட்ச் போட்டு கொடுத்து கொள்ளையடிக்க முடிவு செய்தனர்.

    உத்தமபாளையம்:

    கரூர் மாவட்டம் ஆத்தூர் புதூரைச் சேர்ந்தவர் கணேசன் (வயது 48). இவர் தேனி மாவட்டம் சின்னமனூர் சாமிக்குளம் பகுதியில் நிதி நிறுவனம் நடத்தி வருகிறார். இந்த நிறுவனத்தில் பரமசிவம் என்பவர் மேலாளராக உள்ளார்.

    சின்னமனூர் மற்றும் தேனி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் வட்டிக்கு பணம் கொடுத்து அதனை வசூல் செய்வதற்காக பல ஊழியர்களையும் கணேசன் நியமித்துள்ளார். கணேசன் 2 மாதத்துக்கு ஒரு முறை நிதி நிறுவனத்துக்கு வந்து வரவு செலவு கணக்குகளை பார்த்து பணத்தை பெற்றுச் செல்வது வழக்கம்.

    சம்பவத்தன்று பைனான்ஸ் மேலாளர் பரமசிவம் மற்றும் ஊழியர் கண்ணன் ஆகியோர் வசூல் செய்த பணத்தை எடுத்துக் கொண்டு காமயகவுண்டன்பட்டியில் இருந்து நாராயணதேவன் பட்டி நோக்கி மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டு இருந்தனர்.

    செல்லாயி அம்மன் கோவில் அருகே இவர்கள் நின்று கொண்டு இருந்த போது திடீரென வந்த ஒரு கும்பல் அவர்கள் மீது மிளகாய் பொடியை தூவி ரூ.2 லட்சம் பணம் மற்றும் அவர்கள் வந்த மோட்டார் சைக்கிளையும் திருடிச் சென்றனர்.

    மிளகாய் பொடி தூவியதால் நிலை குலைந்து கீழே விழுந்த அவர்கள் அதன் பின்னர் ராயப்பன்பட்டி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். இன்ஸ்பெக்டர் சரவணன் தலைமையிலான போலீசார் விசாரணை நடத்தினர்.

    நிதி நிறுவனத்தில் பணியாற்றி வந்த கண்ணன் என்பவர் மீது சந்தேகம் ஏற்படவே அவரிடம் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தப்பட்டது. அப்போது கண்ணன் தனது நண்பர்கள் 2 பேரை சேர்த்துக் கொண்டு வசூல் செய்த பணத்தை கொள்ளையடித்தது தெரிய வந்தது. வசூலித்த பணத்துடன் மேலாளர் எந்த வழியில் வருவார்? என்று ஸ்கெட்ச் போட்டு கொடுத்து கொள்ளையடிக்க முடிவு செய்தனர். பணம் அதிகம் இருக்கும் என்றும் எதிர்பார்த்த நிலையில் ரூ.2 லட்சமே கிடைத்ததால் ஏமாற்றமும் அடைந்துள்ளனர்.

    இதனைத் தொடர்ந்து போலீசார் கண்ணன் மற்றும் அவரது கூட்டாளிகளான கரூரைச் சேர்ந்த அபிஷேக் (36), வேலூரைச் சேர்ந்த பாஸ்கரன் (31) ஆகிய 3 பேரையும் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து கொள்ளையடிக்கப்பட்ட பணம் ரூ.2 லட்சம் மற்றும் மோட்டார் சைக்கிளும் பறிமுதல் செய்யப்பட்டது. 

    • மேகநாதன் மூலம் தலைமறைவாக இருந்த சிவசங்கரையும் போலீசார் நேற்று மாலை பிடித்து வந்து தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
    • சிவசங்கர் விட்டு விட்டு சென்ற தொழிலை மேகநாதன் தொடர்ந்து செய்து வந்தபோது தனிப்படை போலீசில் சிக்கியதும் தெரிய வந்தது.

    வண்டலூர்:

    சென்னை வண்டலூர் அடுத்த ஊரப்பாக்கம், ரோகிணி நகர், ரெயில்வே ஸ்டேஷன் ரோட்டை சேர்ந்தவர் அபுதாகிர் (36) இவர் செங்கல்பட்டில் துணி கடை வைத்து நடத்தி வருகிறார்.

    இந்த நிலையில், செங்கல்பட்டு பகுதி சேர்ந்த சிவசங்கர், அவரது மனைவி பெர்னா, சிவசங்கரின் தந்தை சம்பத் மற்றும் அவரது நண்பர் மேகநாதன் ஆகியோர் சேர்ந்து ஊரப்பாக்கத்தில் பலரிடம் மாதம் 50,000 வட்டி தருவதாகவும், இதனால் பல மடங்கு லாபம் சம்பாதிக்கலாம் என்று கூறியும் நிதி நிறுவனம் நடத்தி வந்துள்ளார்.

    இதனை நம்பிய அபுதாகீர் அவரது அக்கா, தங்கை, தம்பி, உறவினர்கள் மற்றும் அக்கம்பக்கத்தினரிடம் நகை, பணம் ஆகியவற்றை வாங்கி சிவசங்கரிடம் ரூ.5 லட்சம் பணம் ரொக்கமாக கொடுத்துள்ளார். இதில் தொடர்ச்சியாக 4 மாதம் தலா ரூ.50 ஆயிரம் என அபுதாகீரிடம் சிவசங்கர் வட்டி கொடுத்துள்ளார்.

    இதனால் சிவசங்கர் மீது அபுதாகீருக்கு மேலும் நம்பிக்கை ஏற்படவே நிதி நிறுவனத்தில் அக்கம்பக்கத்தினரையும் சேர்த்து விட்டுள்ளார்.

    இதனையடுத்து அடுத்த சில மாதங்களில் சிவசங்கரின் போன் சுவிட்ச் ஆப் என வந்ததால் அதிர்ச்சி அடைந்த அபுதாகிர் சிவசங்கரை தேடி அலைந்து திரிந்துள்ளார். ஆனால் அவர் கிடைக்கவில்லை.

    இதுகுறித்து அபுதாகிர் சிவசங்கரின் வீட்டு முகவரி கண்டுபிடித்து அவரது மனைவி பெர்னாவிடம் சென்று கேட்டதற்கு, எனது கணவரை காணவில்லை என்று கடந்த ஆண்டு ஜூலை மாதம் 21-ந் தேதி செங்கல்பட்டு நகர காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளோம்.

    இதுகுறித்து செங்கல்பட்டு நகர காவல் துறையினர் எனது கணவரின் புகைப்படத்துடன் காவல் நிலையத்தில் நோட்டீஸ் ஒட்டி வைத்துள்ளனர் என்று கூறியுள்ளார். இதில் சந்தேகம் அடைந்த அபுதாகிர் கடந்த மாதம் 23-ந்தேதி கூடுவாஞ்சேரி காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர்.

    கூடுவாஞ்சேரி போலீசார் வழக்கு பதிவு செய்து தலைமறைவான சிவசங்கரின் நண்பர் மேகநாதனை நேற்று காலை பிடித்து வந்து விசாரித்தனர். இதனை அடுத்து மேகநாதன் மூலம் தலைமறைவாக இருந்த சிவசங்கரையும் போலீசார் நேற்று மாலை பிடித்து வந்து தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மேலும் விலை உயர்ந்த காரையும் போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். மேலும் ஊரப்பாக்கத்தில் நிதி நிறுவனம் நடத்தி மாதம் ரூ.50 ஆயிரம் வட்டி தருவதாக கூறி பல கோடி சுருட்டிய மோசடி கும்பல் மீது செங்கல்பட்டு காவல் நிலையங்களில் இதுபோன்று 13 புகார்கள் உள்ளது என்றும், இதில் கோடி கணக்கில் சுருட்டிய பணத்தை மேகநாதனிடம் கொடுத்துவிட்டு சிவசங்கர் தலைமறைவானதும், அந்த பணத்தில் செங்கல்பட்டு பகுதியில் தலா ரூ.16 லட்சம் மதிப்பீட்டில் இரண்டு வீடுகள் வாங்கி போட்டதும், ரூ.21 லட்சத்தில் விலை உயர்ந்த கார் ஒன்று வாங்கியதும், இதில் சிவசங்கர் விட்டு விட்டு சென்ற தொழிலை மேகநாதன் தொடர்ந்து செய்து வந்தபோது தனிப்படை போலீசில் சிக்கியதும் தெரிய வந்தது.

    இதில் சுமார் ரூ.4½ கோடி வரை மோசடி செய்த சிவசங்கரை செய்யாரில் தலைமறைவாக இருந்தபோது மேகநாதன் மூலம் பிடிபட்டதும் போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.

    • சீட்டுக்கான காலக்கெடு முடிவுற்ற போதிலும் பலருக்கு பணம் பட்டுவாடா செய்யப்படவில்லை எனக் கூறப்படுகிறது.
    • பாதிக்கப்பட்ட முதலீட்டாளர்கள் சுமார் 60 பேர் கும்பகோணம் மேற்கு காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

    சுவாமிமலை:

    தஞ்சை மாவட்டம் கும்பகோணம் உப்புக்காரத் தெருவில் கடந்த 2 ஆண்டுகளாக நிதி நிறுவனத்தை ராஜேஷ் கண்ணா என்பவர் நடத்தி வந்தார்.

    இந்நிறுவனத்தில் மேலாளராக நரேந்திரன் என்பவர் பணியாற்றி வந்தார்.

    நிரந்தர வைப்பு நிதியாக 1 லட்ச ரூபாய் முதலீடு செய்தால், மாதம் 4000 ரூபாய் வட்டியாக தருவதாக கூறியிருந்தனர். இதில் 200க்குமேற்பட்டோர் முதலீடும் செய்திருந்தனர்.

    மேலும் பலர் மாதாந்திர சீட்டும் கட்டியிருந்தனர். சீட்டுக்கான காலக்கெடு முடிவுற்ற போதிலும் பலருக்கு பணம் பட்டுவாடா செய்யப்படவில்லை எனக் கூறப்படுகிறது.

    கும்பகோணத்தில் இயங்கி வந்த தனியார் நிதி நிறுவனம் கடந்த ஏப்ரல் மாதத்தில் திடீரென மூடப்பட்டுள்ளது.

    இங்கு முதலீடு செய்தவர்கள் இந்நிறுவன உரிமையாளர் ராஜேஷ் கண்ணாவை பலமுறை நேரில் சந்தித்து தங்களுக்கு சேர வேண்டிய பணத்தை கேட்டுள்ளனர். இதைத் தொடர்ந்து பலருக்கு ராஜேஸ்கண்ணா செக் கொடுத்துள்ளார்.

    கொடுத்த செக்குகள் அனைத்தும் கணக்கில் பணம் இல்லை என செக் ரிட்டன் ஆகி உள்ளது.

    இதனால் பாதிக்கப்பட்ட முதலீட்டாளர்கள் சுமார் 60 பேர் கும்பகோணம் மேற்கு காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

    இந்த 60 நபர்கள் கொடுத்த புகார் அடிப்படையில் மோசடியில் செய்யப்பட்ட தொகை சுமார் 50 லட்சம் ரூபாய்க்கு மேல் இருக்கும் என கணக்கிடப்பட்டுள்ளது.

    இதனை தொடர்ந்து கும்பகோணம் போலீஸ் சூப்பிரண்டு மகேஷ் குமார் தலைமையில் தனி படைகள் அமைக்கப்பட்டு குற்றவாளிகளை தேடி வந்தனர். இந்நிலையில் திருச்சியில் பதுங்கியிருந்த இந்நிறுவன உரிமையாளர் ராஜேஷ் கண்ணா மற்றும் மன்னார்குடியில் பதுங்கியிருந்த நரேந்திரன் ஆகியோரை தனிப்படை போலீசார் கைது செய்தனர்.

    பின்னர் இவர்கள் கும்பகோணம் கிளை சிறையில் அடைக்கப்பட்டனர்

    இந்தச் சம்பவம் கும்பகோணம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • வீட்டின் கதவை திறந்து வைத்துக்கொண்டு வெளியே சென்று இருந்தார்.
    • 8 பவுன் நகை திருடப்பட்டிருப்பது தெரிய வந்தது.

    திருப்பூர் :

    திருப்பூர் 15 வேலம்பாளையம் சொர்ணபுரி அவென்யூவில் வசித்து வருபவர் மோகன் ( வயது 53). நிதி நிறுவனம் நடத்தி வருகிறார். இன்று காலை இவர் வீட்டின் கதவை திறந்து வைத்து க்கொண்டு வெளியே சென்று இருந்தார்.

    இதனை நோட்டமிட்ட மர்ம ஆசாமிகள் வீட்டிற்குள் புகுந்ததுடன், பீரோவை திறந்து நகையை எடுத்து க்கொண்டிருந்தனர். அப்போது சத்தம் கேட்டு மோகனின் மனைவி எழுந்தார். உடனே மர்ம ஆசாமிகள் அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர். பின்னர் பீரோவில் பார்த்த போது அதில் இருந்த ரூ.3.50 லட்சம் மதிப்புள்ள 8 பவுன் நகை திருட ப்பட்டிருப்பது தெரிய வந்தது. இது குறித்து 15 வேலம்பாளையம் போலீசில் புகார் செய்ய ப்பட்டது. போலீசார் வழக்கு பதிவு செய்து விசா ரணை நடத்தி வருகி ன்றனர்.

    • நிதி நிறுவனத்தில் ரூ.1¾ லட்சம்-பொருட்கள் திருட்டப்பட்டது.
    • கம்ப்யூட்டர் மானிட்டர் உள்ளிட்ட பொருட்களும் மாயமாகி இருந்தன.

    ஸ்ரீவில்லிபுத்தூர்

    விருதுநகர் மாவட்டம் சிவகாசியை சேர்ந்தவர் பாக்கியராஜ். இவர் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள மல்லி பகுதியில் தனியார் நிதி நிறுவனம் நடத்தி வருகிறார். இவரது அலுவலகத்தில் 4 பேர் பணிபுரிந்து வருகின்றனர். இங்கு இரு சக்கர வாக னங்களுக்கு கடன் அளித்து வருகிறார்கள்.

    நேற்று முன்தினம் இரவு கடைக்கு கொடுப்பதற்காக வைத்திருந்த முன்பணம் ரூ.1 லட்சம் மற்றும் வசூல் செய்த சீட்டு பணம் ரூ.75 ஆயிரம் ஆகியவற்றை அலுவ லகத்துக்குள் வைத்து பூட்டி விட்டு பாக்கியராஜ் வீட்டுக்கு சென்றார்.

    நேற்று காலை மீண்டும் அலுவலகத்தை திறப்ப தற்காக வந்தார். அப்போது முன்பக்க கதவின் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் உள்ளே சென்று பார்த்தபோது அலுவலகத்தில் வைத்து சென்ற ரூ.1 லட்சத்து 70 ஆயிரம் பணம் திருடுபோய் இருந்தது. மேலும் கம்ப்யூட்டர் மானிட்டர் உள்ளிட்ட பொருட்களும் மாயமாகி இருந்தன. மர்ம நபர்கள் நள்ளிரவில் பூட்டை உடைத்து அலுவலகத்தில் புகுந்து பணம் மற்றும் பொருட்களை எடுத்து சென்றுள்ளனர்.

    இதுகுறித்து மல்லி போலீஸ் நிலையத்தில் பாக்கியராஜ் புகார் செய் தார். போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஸ்ரீவில்லிபுத்தூரில் ஒரே நாளில் பல இடங்களில் நடந்த கொள்ளை சம்பவங்கள் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    • மதுரையில் நிதி நிறுவனத்தில் பணம் கட்டி ஏமாந்தவர்கள் புகார் அளிக்கலாம்.
    • மேற்கண்ட தகவலை குற்றப்பிரிவு போலீசார் தெரிவித்துள்ளனர்.

    மதுரை

    மதுரை பீ.பி.குளம் பி.டி.ராஜன்ரோடு ஏ.வி.ஆர். காம்ப்ளக்ஸ் என்ற முகவரியில் பாரமவுண்ட் மார்க்கெட்டிங் கார்ப்பரேஷன் பிரைவேட் லிமிடெட் என்ற பெயரில் நிதிநிறுவனம் இயங்கி வந்தது. இதில் சேக்முகைதீன் என்பவர் நிர்வாக இயக்குனராக இருந்து கொண்டு பொதுமக்களிடம் திருக்குறள் புத்தகங்கள் விற்பனை செய்து அதில் கிடைக்கும் லாபத்தின் பகுதிகளை முதலீட்டாளர்களுக்கு திரும்ப செலுத்துவதாக கூறி, உறுதிமொழியில் கூறியதுபோல் திரும்ப செலுத்தாமல் இருந்துள்ளார்.

    இதில், பாதிக்கப்பட்ட முதலீட்டாளர்கள் மதுரை பொருளாதார குற்றப்பிரிவில் புகார் அளித்து, அதுச ம்பந்தமாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், மதுரை டான்பிட் சிறப்பு நீதிமன்றத்தில் அந்த நிறுவனத்தை சேர்ந்தவர்கள் மீது குற்றப்பத்திரிகையும் தாக்கல் செய்யப்பட்டு, நீதிமன்ற விசாரணையில் இருந்து வருகிறது.

    எனவே இந்த நிதி நிறுவனத்தில் முதலீடு செய்து ஏமாற்றப்பட்ட முதலீட்டாளர்கள் யாரேனும் இதுவரை புகார் அளிக்காமல் இருந்தால், அசல் ஆவணங்களுடன் மதுரை பொருளாதார குற்றப்பிரிவு அலுவலகத்தில் நேரில் வந்து புகார் அளிக்கலாம்.

    மேலும் ஏற்கனவே புகார் கொடுத்திருந்தாலும், தாங்கள் பெயரும் சாட்சிகளாக சேர்க்கப்பட்டுள்ளதா என்பதை அறிய 0452-2642161 என்ற தொலைபேசி எண் மூலம் தொடர்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம்.

    இந்த தகவலை மதுரை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் தெரிவித்துள்ளனர்.

    • பொருளாதார குற்றப்பிரிவு போலீஸ் அறிவிப்பு
    • மோசடி உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு, புலன் விசாரணை நடந்து வருகிறது.

    நாகர்கோவில் :

    குமரி மாவட்ட பொருளாதார குற்றப்பிரிவு காவல் நிலைய செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    குமரி மாவட்டம் மூவாற்று முகம் அரங்கன் விளையில் இயங்கி வந்த மூவாற்றுமுகம் சிவ சாஸ்தா சிட்பண்ட் (பி) லிமிடெட் என்ற நிதி நிறுவ னத்தின் மீது, நாகர்கோவில் பொருளாதார குற்றப்பிரிவு போலீஸ் நிலையத்தில் மோசடி உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு, புலன் விசாரணை நடந்து வருகிறது.

    இந்த வழக்கில் விரைவில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட வேண்டி இருப்பதால், இந்த நிதி நிறுவனத்தில் பணம் முதலீடு செய்து ஏமாந்து இது வரையிலும் நாகர்கோவில் பொருளாதார குற்றப் பிரிவு அலுவலகத்தில் புகார் மனு கொடுக்காதவர்கள் உடனடியாக நாகர்கோவில் பொருளாதார குற்றப்பிரிவு அலுவலகத்துக்கு நேரில் வந்து அசல் ஆவணங்களுடன் புகார் மனு கொடுக்கும்படி கேட்டடுக் கொள்ளப்படுகிறார்கள்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • நுகர்வோர் கோர்ட்டு உத்தரவு
    • ரூ.20 ஆயிரம் நஷ்டஈடு மற்றும் வழக்கு செலவு தொகை ரூ. 5 ஆயிரம்

    நாகர்கோவில் :

    குமரி மாவட்டம் பள்ளியாடியை சேர்ந்த எட்வின்பால், புதிய மோட்டார் சைக்கிள் வாங்க திட்டமிட்டார். இதற்காக மார்த்தாண்டத்தில் உள்ள தனியார் நிதி நிறுவனத்திடம் கடன் வாங்கினார். இதனை தொடர்ந்து இரு சக்கர வாகனத்தை பதிவு செய்த ஒரிஜினல் ஆர்.சி. புத்தகம், நிதி நிறுவனம் வசம் இருந்தது. இந்த நிலையில் ஆர்.சி. புத்தகம் தொலைந்து விட்டது என நிதி நிறுவனம் கூறியது. இதனைத் தொடர்ந்து எட்வின்பால், வக்கீல் நோட்டீசு அனுப்பினார். ஆனால் உரிய பதில் கிடைக்காததால், கன்னியாகுமரி மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் எட்வின் பால் வழக்கு தொடர்ந்தார்.

    ஆணைய தலைவர் சுரேஷ், உறுப்பினர் சங்கர் ஆகியோர் வழக்கை விசாரித்து, நிதி நிறுவனத்தின் சேவை குறைபாட்டினை சுட்டிக் காட்டினர். மேலும் பாதிக்கப்பட்ட நுகர்வோருக்கு புதிய ஆர்.சி. புத்தகம், ரூ.20 ஆயிரம் நஷ்டஈடு மற்றும் வழக்கு செலவு தொகை ரூ. 5 ஆயிரம் ஆகியவற்றை ஒரு மாத காலத்திற்குள் வழங்க வேண்டும் என உத்தர விட்டனர்.

    • நுகர்வோர் குறைதீர் ஆணையம் உத்தரவு
    • எந்தவிதமான தகவலும் கூறாமல் அனைத்து நகைகளையும் ஏலம் விட்டு விட்டதாக தெரிவித்துள்ளது

    நாகர்கோவில் :

    தக்கலை அருகே உள்ள குமாரகோயிலை சேர்ந்த கிருஷ்ணகுமார் வில்லுக்குறி யிலுள்ள ஒரு தனியார் நிதிநிறுவனத்தில் நகைக் கடன் எடுத்திருந்தார்.

    அடகு வைத்த நகைகளை திருப்புவதற்காக எதிர்தரப் பினரை தொடர்பு கொண்ட போது நீங்கள் எப்போது வேண்டுமானாலும் அசல் மற்றும் வட்டியினை செலுத்தி நகைகளை திருப்பி கொள்ளலாம் என தெரிவித்திருந்தனர். ஆனால் நுகர்வோருக்கு எந்த வித அறிவிப்பும் கொடுக்காமல் அடகு வைத்த நகைகளை ஏலத்தில் விடுவதற்கு முயற்சி செய்வ தாக தெரிய வந்துள்ளது.

    உடனே மனுதாரர் நகையை திருப்ப எவ்வளவு பணம் செலுத்த வேண்டு மென கணக்கு விபரம் தருமாறு நேரில் சென்றுள் ளார். ஆனால் அவரை அலைக்கழித்ததுடன் கணக்கு விபரத்தை கொடுக்கவில்லை. அதோடு எந்தவிதமான தகவலும் கூறாமல் அனைத்து நகைகளையும் ஏலம் விட்டு விட்டதாக நிதி நிறுவனம் தெரிவித்துள்ளது. இது ஒரு சேவை குறைபாடு என்பதால் நுகர்வோர் வழக்கறிஞர் மூலம் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

    ஆனால் இதன் பின்னரும் உரிய பதில் கிடைக்காததால் மனஉளைச்சலுக்கு ஆளான கிருஷ்ணகுமார் கன்னியாகுமரி மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் வழக்கு தொடர்ந்தார்.

    வழக்கை விசாரித்த கன்னியாகுமரி மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணைய தலைவர் சுரேஷ், உறுப்பினர் சங்கர் ஆகி யோர் தனியார் நிதி நிறுவனத்தின் சேவை குறைபாட்டினை சுட்டிக் காட்டி பாதிக்கப்பட்ட நுகர்வோருக்கு நஷ்ட ஈடு ரூ.5 லட்சம் மற்றும் வழக்கு செலவு தொகை ரூ.5,000 ஆகியவற்றை ஒரு மாத காலத்திற்குள் வழங்க வேண்டும் எனவும், மேலும் அடகு தொகையை பெற்றுக் கொண்டு நகைகளை உடனடியாக திரும்ப வழங்க வேண்டுமென உத்தர விட்டனர்.

    • கம்ப்யூட்டர்-ஆவணங்களை விசாரணைக்காக எடுத்துச் சென்றனர்
    • ரூ.25 ஆயிரம் முதல் ரூ.30 ஆயிரம் வரை செலுத்தி சுமார் 3 ஆயிரம் பேர் வரை உறுப்பினர்கள்

    கன்னியாகுமரி :

    குமரி மாவட்டத்தில் உடை யார்விளை, வேர்கிளம்பி, களியல், அழகியமண்டபம் ஆகிய இடங்களில் கடந்த சில நாட்களுக்கு முன்பு நிதி நிறுவனம் தொடங்கப்பட்டு, தனி நபர் கடன், மகளிர் சுய உதவிக்குழுவினருக்கு பல்வேறு கடன் உதவி வழங்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டது.

    இதை நம்பி கடன் கிடைக்கும் என்ற நம்பிக்கை யில் கடன் தொகைக்கு ஏற்ப ரூ.25 ஆயிரம் முதல் ரூ.30 ஆயிரம் வரை செலுத்தி சுமார் 3 ஆயிரம் பேர் வரை உறுப்பினர்களாக சேர்ந்ததாக கூறப்படுகிறது.

    இவர்களுக்கு கடன் வழங்கும் விழா 14-ந் தேதி அழகியமண்டபம் பகுதியில் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டு, கடன் கேட்டு முன் பணம் செலுத்தியவர்கள் வங்கி கணக்கில் ரூ.100 செலுத்தி ஒத்திகையும் நடத்தினர். இதனால் பணம் செலுத்தியவர்கள் கடன் தொகை கிடைக்கும் என நம்பினர்.

    இந்நிலையில் நிதி நிறுவனத்தில் பங்கு தாரர்களாக இருந்து பணியாளர்கள் சேர்ப்பு, உறுப்பினர்கள் சேர்ப்பை நடத்தியவர்கள் 13-ந் தேதியே மாயமானார்கள்.அவர்களின் செல்போன்கள் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டது.இதையடுத்து இந்த நிதி நிறுவனத்தில் பணம் செலுத்தி ஏமாந்த அனைவரும் எஸ்.பி. அலுவலகத்தில் புகார் அளித்தனர்.

    புகாரின்பேரில் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். நிதி நிறுவன இயக்குனர்கள் என கூறிய தூத்துக்குடியை சேர்ந்த சியாம் ஜோஸ்வா, துர்கா தேவி, சிவகங்கையை சேர்ந்த வேணுகோபால், திருநெல்வேலியை சேர்ந்த அல்தாப், கும்பகோணத்தை சேர்ந்த சந்தோஷ், பாளையங்கோட்டையை சேர்ந்த ஜமால் ஆகிய 6 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

    இவர்களின் முழு முகவரி மற்றும் அடையாளங்கள் யாருக்கும் தெரியவில்லை. இவர்களின் புகைப்படங்கள் மூலம் அடையாளம் காணும் முயற்சியில் போலீசார் இறங்கி உள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக மாவட்ட குற்றப்பிரிவுக்கு புகார்கள் குவிந்த வண்ணம் உள்ளன.

    இந்நிலையில் குற்றப்பி ரிவு இன்ஸ்பெக்டர் உமா தலைமையில் போலீசார் நேற்று உடையார்விளை மோசடி நிதி நிறுவனத்திற்கு சென்றனர். அப்போது நிறுவனம் பூட்டிக்கிடந்தது.போலீசார் நிறுவன அலுவலகத்தை வாடகைக்கு எடுத்து கொடுத்த அப்பகுதியை சேர்ந்த ஒருவரிடம் அலுவலக சாவி உள்ளது என்பதை அறிந்து அவரது உதவியுடன் அலுவலகத்தை திறந்து உள்ளே சென்றனர்.

    அலுவலகத்தின் உள்ளே இருந்த கம்ப்யூட்டர் மற்றும் 50-க்கும் மேற்பட்ட கணக்கு சம்பந்தமான நோட்டு புத்தகங்கள் மற்றும் ஆவணங்களையும் விசாரணைக்காக எடுத்து சென்றனர். இது போல் மற்ற 3 கிளைகளில் உள்ள ஆவணங்களையும் குற்றப்பிரிவு போலீசார் எடுத்து சென்றதாக போலீசார் தெரிவித்தனர்.

    உடையார்விளை கிளை அலுவலகத்தை குற்றப்பிரிவு போலீசார் திறந்து ஆவணங்களை பார்க்கும்போது பணம் செலுத்தி ஏமாந்த பொது மக்கள் சிலர் சோகத்துடன் அங்கு கூடினர். குற்றப்பிரிவு போலீசார் ஆவணங்களை எடுத்து சென்றதும் அவர்கள் கலைந்து சென்றனர்.

    • கீழக்கரை அருகே நிதி நிறுவனத்தில் புகுந்து ரூ.2 லட்சம் கொள்ளையடிக்கப்பட்டது.
    • இந்த கொள்ளை சம்பவத்தில் தொடர்புடைய நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

    கீழக்கரை

    ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை அருகே உள்ள காஞ்சிரங்குடி கிருஷ்ணாபுரத்தை சேர்ந்தவர் செல்வராஜ்(வயது48). இவர் தனது வீட்டின் எதிர்ப்புறம் உள்ள கட்டிடத்தில் நிதி நிறுவனம் நடத்தி வருகிறார். நேற்றுஇரவு வழக்கம்போல் நிதி நிறுவனத்தை பூட்டிவிட்டு செல்வராஜ் வீட்டுக்கு சென்றுவிட்டார்.

    இந்தநிலையில் நள்ளிரவு நேரத்தில் அங்கு வந்த மர்மநபர்கள், நிதி நிறுவனத்தின் கதவை உடைத்து உள்ளே புகுந்தனர். பின்னர் அங்கு கல்லாப்பெட்டியில் இருந்த பணத்தை திருடிக்கொண்டு தப்பினர்.

    இன்று காலை செல்வராஜ் வீட்டிற்கு வெளியே வந்து தனது நிதி நிறுவனத்தை பார்த்தார்.

    அப்போது நிதி நிறுவன த்தின் கதவு உடைக்கப்ப ட்டிருப்பதை கண்டு அதிர்ச்சி யடைந்தார். இதையடுத்து அவர் நிதிநிறுவனத்தின் உள்ளே சென்று பார்த்தார். அப்போது நிதி நிறுவனத்தில் வைக்ககப்பட்டிருந்த ரூ.1 லட்சத்து 92 ஆயிரத்தை பணம் திருட்டு போயிருந்தது தெரியவந்தது.

    இதுகுறித்து அவர் கீழக்கரை போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தார். இதையடுத்து சப்-இன்ஸ்பெக்டர் முத்துக்குமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். மேலும் தடயவியல் நிபுணர்களும் வரவழைக்கப்பட்டனர்.

    அவர்கள் நிதி நிறுவன த்தில் பதிவாகியிருந்த கைரேகைகள் உள்ளிட்ட தடயங்களை சேகரித்தனர். இந்த கொள்ளை சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து கொள்ளையில் ஈடுபட்ட நபர்களை தேடி வருகின்றனர்.

    நிதிநிறுவனத்தில் பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் கீழக்கரை பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    ×